sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தேர்தல் பறக்கும் படைக்கு பயிற்சி வழங்க ஏற்பாடு

/

தேர்தல் பறக்கும் படைக்கு பயிற்சி வழங்க ஏற்பாடு

தேர்தல் பறக்கும் படைக்கு பயிற்சி வழங்க ஏற்பாடு

தேர்தல் பறக்கும் படைக்கு பயிற்சி வழங்க ஏற்பாடு


UPDATED : பிப் 29, 2024 12:00 AM

ADDED : பிப் 29, 2024 09:16 AM

Google News

UPDATED : பிப் 29, 2024 12:00 AM ADDED : பிப் 29, 2024 09:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி:
மாவட்டத்தில் லோக்சபா தேர்தல் பணியில் ஈடுபட உள்ள பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் பறிமுதல் செய்யும் பொருட்களை இ.எஸ்.எம்.எஸ்., செயலில் பதிவேற்ற குறித்து பயிற்சி வழங்கப்பட உள்ளது.தேனி லோக்சபா தொகுதியில் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் (தனி), போடி, கம்பம், சோழவந்தான் (தனி), உசிலம்பட்டி ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மாவட்டத்தில் 4 சட்டசபை தொகுதிகள் உள்ளன. லோக்சபா தேர்தலில் பணிபுரியும் அலுவலர்கள், வாக்குச்சாவடி மையங்கள் உள்ளிட்டவை முடிவு செய்யப்பட்டு விட்டன. தேர்தல் தேதி அறிவித்தவுடன், பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.லோக்சபா தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் 3 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு குழுவிற்கு 3 உறுப்பினர்கள் உள்ளனர். ஆண்டிப்பட்டி தொகுதியில் மட்டும் 4 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 13 பறக்கும் படையில் 39 பேர், கூடுதலாக 10 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் சோதனை, பொருட்களை பறிமுதல் செய்தால் இ.எஸ்.எம்.எஸ்., செயலில் பதிவேற்றம் செய்தல் உள்ளிட்ட பயிற்சிகள் விரைவில் வழங்கப்பட உள்ளன.






      Dinamalar
      Follow us