sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 தேர்வு 12,541 மாணவர்கள் இன்று பங்கேற்பு

பிளஸ் 2 தேர்வு 12,541 மாணவர்கள் இன்று பங்கேற்பு

பிளஸ் 2 தேர்வு 12,541 மாணவர்கள் இன்று பங்கேற்பு


UPDATED : மார் 01, 2024 12:00 AM

ADDED : மார் 01, 2024 09:37 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 01, 2024 12:00 AM ADDED : மார் 01, 2024 09:37 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்:
தமிழகம் முழுதும், பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வுகள் இன்று துவங்கி, 22ம் தேதி நிறைவு பெறுகின்றன. பிளஸ் 1 பொதுத்தேர்வுகள் மார்ச் 4ம் தேதி துவங்கி, 25ம் தேதி நிறைவு பெறுகின்றன. 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் 26ம் தேதி துவங்கி, ஏப்ரல் 8ம் தேதி நிறைவு பெறுகின்றன.அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், தனியார் மற்றும் அரசு பள்ளிகள் என, மொத்தம், 106 மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இன்று துவங்கும் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வுக்கு, 54 தேர்வு மையங்களில், 5,750 மாணவர், 6,791 மாணவியர் என மொத்தம், 12,541 நபர்கள் தேர்வு எழுதுகின்றனர்.அதேபோல், 184 பள்ளிகளைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவ -- மாணவியர் இந்தாண்டு அரசு பொதுத்தேர்வு எழுத உள்ளனர். பிளஸ் 2, பிளஸ் 1 வகுப்பு தேர்வுகளுக்கு தலா 54 மையங்களிலும், 10ம் வகுப்பு தேர்வுக்கு 66 மையங்கள் என, 120 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளன. இதில், 42,585 மாணவ, மாணவியர் பிளஸ் 2, பிளஸ் 1, மற்றும் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் எழுத உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us