sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அங்கன்வாடி குழந்தைகளை பள்ளியில் சேர்க்க அறிவுரை

/

அங்கன்வாடி குழந்தைகளை பள்ளியில் சேர்க்க அறிவுரை

அங்கன்வாடி குழந்தைகளை பள்ளியில் சேர்க்க அறிவுரை

அங்கன்வாடி குழந்தைகளை பள்ளியில் சேர்க்க அறிவுரை


UPDATED : மார் 04, 2024 12:00 AM

ADDED : மார் 04, 2024 08:46 AM

Google News

UPDATED : மார் 04, 2024 12:00 AM ADDED : மார் 04, 2024 08:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
அங்கன்வாடி மையங்களில் படிக்கும் குழந்தைகளில், 5 வயதை நிறைவு செய்யும் குழந்தைகளை, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சேர்க்க, தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.இதுதொடர்பாக, பள்ளிக்கல்வி துறை செயலர் குமரகுருபரன், மாவட்ட கலெக்டர்களுக்கு எழுதியுள்ள கடிதம்:
* அரசு பள்ளிகளில், 2024 - 25ம் கல்வியாண்டில், மாணவர் சேர்க்கையை, மார்ச் 1ல் துவக்க, விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளில், 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை சேர்க்கவும், பள்ளிகளில் கிடைக்கும் நலத்திட்டங்கள், உதவித்தொகைகள் குறித்த விபரங்களை, மக்களுக்கு தெரிவிக்கும் வகையிலும், ஆசிரியர்கள் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும்* அங்கன்வாடி மையங்களில், பள்ளி முன்பருவக் கல்வியை கற்று வருவோரில், 5 வயது நிறைவு செய்யும் குழந்தைகள் விபரம் பெற்று, அவர்களை அரசு பள்ளிகளில் முதல் வகுப்பில் சேர்க்க வேண்டும்* வேறு பள்ளிகளில் இருந்து, அரசு பள்ளிகளில் சேர விரும்பும் குழந்தைகளை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்* அங்கன்வாடி மையங்களில் இருந்து வெளிவரும் குழந்தைகளில், ஒருவர் கூட விடுபடாமல், அனை வரையும் அரசு பள்ளிகளில் சேர்க்கவும், வரும் ஆண்டில் மாணவர் சேர்க்கை விகிதத்தை கணிச மாக உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்* மாணவர் சேர்க்கை பணி மற்றும் விழிப்புணர்வு சேர்க்கை பணியை, தங்கள் மாவட்டத்தில் சிறப்பாக நடத்தி, அனைத்து பள்ளி வயது குழந்தைகளையும், பள்ளிகளில் சேர்க்கை செய்திட, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us