UPDATED : மார் 08, 2024 12:00 AM
ADDED : மார் 08, 2024 10:16 AM
சின்னாளபட்டி:
காந்திகிராம பல்கலையில் நாளை நடக்கும் 37வது பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பங்கேற்க உள்ளார்.இங்கு 2022 நவ. 11ல் நடந்த 36வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றனர். இதில் 2018--19, 2019-20 கல்வியாண்டு மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.எஞ்சிய மாணவர்களுக்கு தனியே பட்டமளிப்பு நடக்கும் என நிர்வாகம் தெரிவித்திருந்தது. சமீபத்தில் இதற்கான அறிவிப்பை பல்கலை வெளியிட்டது.அதன்படி 2020-21, 2021-22, 2022-23 கல்வி ஆண்டுகளுக்கான 37-வது பட்டமளிப்பு விழா மார்ச்9ல் நடத்தப்பட உள்ளது. சம்பந்தப்பட்ட கல்வி ஆண்டுகளில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் பல்கலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.பல்கலை வேந்தர் அண்ணாமலை தலைமையில் 4201 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படுகிறது. இஸ்ரோ தலைவர் சோம்நாத் பங்கேற்க உள்ளார்.

