UPDATED : மார் 09, 2024 12:00 AM
ADDED : மார் 09, 2024 09:19 AM
சென்னை:
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சிறப்பாக பணியாற்றிய, 24 பேருக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் வழங்கினார்.சென்னையில் தொழிலாளர் நலத்துறை கூட்டரங்கில் நடந்த நிகழ்வில், 2021 - 22; 2022 - 23ம் ஆண்டுகளில் சிறப்பாக பணிபுரிந்த, அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்கள் நான்கு பேர், பயிற்சி அலுவலர்கள் நான்கு பேர்.உதவி பயிற்சி அலுவலர்கள் எட்டு பேர், இளநிலை பயிற்சி அலுவலர்கள் எட்டு பேர் என, மொத்தம் 24 பேருக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகளை அமைச்சர் கணேசன் வழங்கினார்.59 பேர் நியமனம்
மேலும், டி.என்.பி.எஸ்.சி., குரூப் -2 தேர்வில், தொழிலாளர் நலத்துறைக்கு, 37 உதவி ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். வேலைவாய்ப்பு பிரிவில், 11 இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள், எட்டு இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள், உதவி பயிற்சி அலுவலர் தொழிற்பிரிவுக்கு இருவர், இளநிலை உதவியாளராக ஒருவர் என, 59 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், தொழிலாளர் நலத்துறை செயலர் குமார் ஜெயந்த், தொழிலாளர் ஆணையர் அதுல்ஆனந்த் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

