sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பிளஸ் 2 வேதியியல் தேர்வில் 8 மதிப்பெண்களுக்கு குழப்ப வினா: மாணவர்கள் அதிர்ச்சி

/

பிளஸ் 2 வேதியியல் தேர்வில் 8 மதிப்பெண்களுக்கு குழப்ப வினா: மாணவர்கள் அதிர்ச்சி

பிளஸ் 2 வேதியியல் தேர்வில் 8 மதிப்பெண்களுக்கு குழப்ப வினா: மாணவர்கள் அதிர்ச்சி

பிளஸ் 2 வேதியியல் தேர்வில் 8 மதிப்பெண்களுக்கு குழப்ப வினா: மாணவர்கள் அதிர்ச்சி


UPDATED : மார் 12, 2024 12:00 AM

ADDED : மார் 13, 2024 09:28 AM

Google News

UPDATED : மார் 12, 2024 12:00 AM ADDED : மார் 13, 2024 09:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:
பிளஸ் 2 வேதியியல் பொதுத் தேர்வில் பாடத்திட்டத்தில் இல்லாத மற்றும் முழுமையடையாத வினா என 8 மதிப்பெண்களுக்கு குழப்பமாக கேட்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.வேதியியல் தேர்வில் மூன்று மதிப்பெண் பகுதியில் அணைவு சேர்மங்கள் என்ற 5வது பாடத்தில் இருந்து 33வது வினா கேட்கப்பட்டது. அந்த வினா பாடத்தில் இடம் பெறாதது.இதுபோல் 5 மதிப்பெண் பகுதியில் 38 வது வினா ஆ பிரிவில் நைட்ரஜன் சேர்மங்கள் என்ற13வது பாடத்தில் இருந்து இடம் பெற்றுள்ளது. அந்த வினாவில் சேர்மம் (சி) ஆனது அடர் ஹெச்.சி.எல்., (ஹைட்ரோ குளோரிக் அமிலம்) உடன் வினைபுரிந்து.. என்ற வரி இடம் பெற்றுள்ளது. ஆனால் அந்த வரியில் சேர்மம் (சி) ஆனது அடர் ஹெச்.சி.எல்., (ஹைட்ரோ குளோரிக் அமிலம் ) மற்றும் நீருடன் உடன் வினைபுரிந்து... என கேட்டிருக்க வேண்டும். நீருடன் வினை புரிந்து என்ற வார்த்தைகள் இல்லை. மேலும் &'675 கெல்வினுடன் வினைபுரிந்து என்ற வார்த்தையும் இடம் பெறாமல் அந்த வினா முழுமை பெறாமல் உள்ளது. இதுபோன்ற குழப்பங்களால் மாணவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகினர்.வேதியியல் பாட ஆசிரியர்கள் கூறுகையில், இத்தேர்வில் ஒரு மதிப்பெண் பகுதியில் 5 வினாக்கள் யோசித்து எழுதும் படி கேட்கப்பட்டுள்ளது. இதுபோல் 8 மதிப்பெண்களுக்கு பாடத்திட்டத்தில் இல்லாத மற்றும் முழுமை பெறாத வினாக்களாக கேட்கப்பட்டுள்ளது. வினாத்தாள் தயாரிப்பு குழு மனசாட்சியின்றி கல்லுாரி மாணவர்களுக்கான தரத்தில் தயாரித்துள்ளது ஏற்கமுடியாது. இது மாணவர்களை சோர்வடைய வைத்துள்ளது. இதுகுறித்து தேர்வுத்துறைக்கு மாவட்டங்கள் வாரியாக தெரியப்படுத்தியுள்ளோம். மாணவர்களின் உணர்வுகளை மதித்து 8 மதிப்பெண்களை போனஸ் மதிப்பெண்ணாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us