அமெரிக்காவில் சட்ட மேற்படிப்பு: சமையல்காரர் மகளுக்கு தலைமை நீதிபதி பாராட்டு
அமெரிக்காவில் சட்ட மேற்படிப்பு: சமையல்காரர் மகளுக்கு தலைமை நீதிபதி பாராட்டு
UPDATED : மார் 14, 2024 12:00 AM
ADDED : மார் 14, 2024 08:37 PM
புதுடில்லி:
சமையல்காரராக பணியாற்றுபவரின் மகளுக்கு அமெரிக்காவில் சட்ட மேற்படிப்பு படிக்க உதவித்தொகை கிடைத்ததற்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பாராட்டு தெரிவித்துள்ளார்.உச்ச நீதிமன்ற வளாகத்தில் உள்ள கேன்டீனில் சமையல்காரராக பணியாற்றுபவரின் மகள் பிரக்யாவுக்கு அமெரிக்காவில் உள்ள 2 முன்னணி பல்கலைக்கழகங்களில் சட்ட மேற்படிப்பு படிக்க உதவித்தொகை கிடைத்துள்ளது. அமெரிக்கா செல்லும் நிலையில், பிரக்யாவின் குடும்பத்தை அழைத்து, அவர்களுக்கு சால்வை அணிவித்து தலைமை நீதிபதி சந்திரசூட் கவுரவித்தார்.பிறகு அவர் கையெழுத்திட்ட இந்திய அரசியலமைப்பு சட்டம் தொடர்பான 3 புத்தகங்களை பிரக்யாவுக்கு பரிசாக வழங்கினார். அப்போது பிரக்யாவிடம் தலைமை நீதிபதி சந்திரசூட், நல்லா படிக்க வேண்டும். அமெரிக்காவில் படித்து முடித்து விட்டு மீண்டும் இந்தியாவுக்கு சேவை செய்ய வர வேண்டும் என தெரிவித்தார்.

