UPDATED : நவ 29, 2010 12:00 AM
ADDED : நவ 29, 2010 03:33 PM
அ நிறம் | அளவு
ஐ.ஐ.டி., கான்பூர், மாணவர்களுக்கு இரவில் இணையதள சேவை வழங்குவதை நிறுத்த திட்டமிட்டுள்ளது. அங்கு பயிலும் விடுதி மாணவர்களுக்கு வயர்லெஸ் இன்டர்நெட் வசதி இரவிலும் வழங்கப்பட்டு வருகிறது. சமீப காலமாக அங்கு தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
மாணவர்கள் இரவு முழுக்க இணையதளத்தை பயன்படுத்துவதால்படிப்பில் போதிய கவனம் செலுத்த தவறுவதோடு மன அழுத்தத்திற்கு ஆளாவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்தே இரவில் இணையதள வசதியை "கட்&' செய்ய ஐ.ஐ.டி., தரப்பில் தீவிரமாக சிந்தித்து வருகின்றனர்.
