sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

எம்.இ., எம்.டெக்., கவுன்சிலிங் நிறைவு; 50 சதவீத இடங்கள் ‘காலி’

/

எம்.இ., எம்.டெக்., கவுன்சிலிங் நிறைவு; 50 சதவீத இடங்கள் ‘காலி’

எம்.இ., எம்.டெக்., கவுன்சிலிங் நிறைவு; 50 சதவீத இடங்கள் ‘காலி’

எம்.இ., எம்.டெக்., கவுன்சிலிங் நிறைவு; 50 சதவீத இடங்கள் ‘காலி’


UPDATED : ஆக 01, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Google News

UPDATED : ஆக 01, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மொத்த இடங்களில், 50 சதவீத்திற்கும் அதிகமாக இடங்கள் காலியாக உள்ளன.
முதுநிலை பொறியியல் படிப்பிற்கு மொத்தம் ஆறாயிரத்து 106 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 60 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
முதுநிலை பொறியியல் படிப்பில் ஆறாயிரத்து 279 இடங்கள் உள்ளன. முதுநிலை பொறியியல் படிப்பில் சேர தகுதி பெற்றிருந்த ஆறாயிரத்து 46 பேரும், இந்த ஏழு நாள் கவுன்சிலிங்கில் அழைக்கப்பட்டிருந்தனர்.
ஆனால், ஏழு நாள் கவுன்சிலிங்கில் மூன்றாயிரத்து 106 பேர் மட்டுமே இடங்களை தேர்வு செய்துள்ளனர். முதுநிலை பொறியியல் படிப்பிற்கான கவுன்சிலிங்கின் முடிவில் மூன்றாயிரத்து 173 இடங்கள் காலியாக உள்ளன. இது மொத்த இடங்களில் 50 சதவீத்திற்கும் அதிகம்.
பி.இ., பி.டெக்., ஆகிய இளநிலை பொறியியல் பட்டம் பெற்ற உடனேயே மாணவர்களுக்கு கைநிறைய சம்பளத்துடன், முன்னணி நிறுவனங்களில் வேலை கிடைத்துவிடுகிறது. முதுநிலை பொறியியல் படிப்பில் சேர்ந்து  கூடுதலாக இரண்டு வருடங்கள் படிக்க மாணவர்கள் விரும்புவதில்லை.
இதனால், இளநிலை படிப்பைப் போல அல்லாமல், முதுநிலை பொறியியல் படிப்பை நடத்தும் தனியார் பொறியியல் கல்லூரிகளும் இடங்களை தராளமாக அண்ணா பல்கலைக் கழக கவுன்சிலிங்கிற்கு வழங்குகின்றன.
பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உதரியராஜ் கூறுகையில், “கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு முதுநிலை பொறியியல் படிப்பில் நிறைய மாணவர்கள் சேர்ந்துள்ளனர்,” என்று தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us