sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

காமன்வெல்த் மாநாடு: உத்தமபாளையம் மாணவர் தேர்வு

/

காமன்வெல்த் மாநாடு: உத்தமபாளையம் மாணவர் தேர்வு

காமன்வெல்த் மாநாடு: உத்தமபாளையம் மாணவர் தேர்வு

காமன்வெல்த் மாநாடு: உத்தமபாளையம் மாணவர் தேர்வு


UPDATED : ஆக 07, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Google News

UPDATED : ஆக 07, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற


தேனி:
உத்தமபாளையம் மாணவர் செல்வ கணேசன், சீனாவில் காமன்வெல்த் நாடுகள் சார்பில் நடக்கவுள்ள இளைஞர்கள் முகாமில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரியில் எம்.ஏ., படிக்கும் மாணவர் செல்வ கணேசன். கல்லூரியில் படிக்கும் போது ‘பைன் ஆர்ட்ஸ்’ துறை மூலம் இவருக்கு கலை ஆர்வம் ஏற்பட்டது.
ஜன., 26ம் தேதி டில்லியில் நடந்த குடியரசு தின விழாவில் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் சார்பாக நடந்த கலாசார கலை நிகழ்ச்சிகளில், தமிழகத்திலிருந்து பங்கேற்ற 23 மாணவ, மாணவிகளில் முதல் மாணவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதன்மூலம், இலங்கையில் நடைபெற்ற சார்க் நாடுகளின் 15வது மாநாடு சார்பாக நடந்த இளைஞர்கள் முகாமில், இந்தியாவிலிருந்து பங்கேற்ற ஆறு பேரில் செல்வ கணேசனும் ஒருவர்.
தமிழக, இந்திய கலாசாரம், பண்பாட்டு முறைகளை நாட்டுப்புறக் கலைகளான கரகம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரை, ஒயிலாட்டம் ஆகியவை மூலமும், நாடகம் மூலமாகவும் வெளிப்படுத்தும் கலாசார நிகழ்ச்சிகளை செல்வ கணேசன் நடத்தினார்.
தற்போது சீனாவில் காமன்வெல்த்  நாடுகள் சார்பில் செப்., மற்றும் அக்., மாதங்களில் நடைபெறவுள்ள இளைஞர்கள் முகாமில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us