sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பி.எஸ்.ஜி., கல்வி நிறுவனங்களை பல்கலையாக மாற்றுவதற்கு எதிர்ப்பு

/

பி.எஸ்.ஜி., கல்வி நிறுவனங்களை பல்கலையாக மாற்றுவதற்கு எதிர்ப்பு

பி.எஸ்.ஜி., கல்வி நிறுவனங்களை பல்கலையாக மாற்றுவதற்கு எதிர்ப்பு

பி.எஸ்.ஜி., கல்வி நிறுவனங்களை பல்கலையாக மாற்றுவதற்கு எதிர்ப்பு


UPDATED : ஆக 07, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Google News

UPDATED : ஆக 07, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற


கோவை:
பி.எஸ்.ஜி., கல்வி நிறுவனங்களை, தனியார் பல்கலைக்கழகமாக தரம் உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கம் (எஸ்.எப்.ஐ.,) காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் முன்பு ஆகஸ்ட் 6ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தியது.
எஸ்.எப்.ஐ., கோவை மாவட்ட தலைவர் கரீம் பேசுகையில், “பி.எஸ்.ஜி., கல்வி நிறுவனங்களில் வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு சம்பளமாக ஆண்டுக்கு ரூ.5.25 கோடி வழங்குகிறது அரசு. பி.எஸ்.ஜி., கல்வி நிறுவன கட்டடம், ஆசிரியர், அலுவலர்கள் அனைவருமே அரசின் சொத்து.
பி.எஸ்.ஜி., கல்வி நிறுவனத்தை தனியார் பல்கலையாக்கினால், கல்வி வியாபாரமாகிவிடும். இதனால் பி.எஸ்.ஜி., கல்வி நிறுவனங்களை, பல்கலையாக தரம் உயர்த்த மாணவர்கள் ஒரு போதும் அனுமதிக்க கூடாது,” என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us