UPDATED : பிப் 23, 2011 12:00 AM
ADDED : பிப் 23, 2011 12:02 PM
கடந்த 5 வருடங்களில் நாடு முழுவதிலுமுள்ள சட்டக் கல்லூரிகளுக்கு பி.சி.ஐ. வழங்கிய இணைப்பு அங்கீகாரங்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது. காசியாபாத்திலுள்ள குளோபல் சட்டக் கல்லூரிக்கு தவறான இணைப்பு அங்கீகாரம் வழங்கிய விஷயத்தில் பி.சி.ஐ. உதவி தலைவர் ஆர்.தன்பால் ராஜை சி.பி.ஐ. கைது செய்துள்ளது.
இதனடிப்படையில் கடந்த 5 ஆண்டுகளில் வழங்கப்பட்ட இணைப்பு அங்கீகாரங்களின் நம்பகத்தன்மை பற்றிய விசாரணையில் சி.பி.ஐ. இறங்கியுள்ளதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஒரு சட்டக் கல்லூரியில் ஆய்வுசெய்து, அதைப்பற்றி நல்லவிதமாக சான்றிதழ் கொடுப்பதற்கு பேரம் பேசிய விவகாரத்தில் ஈடுபட்டதாக டெல்லி பார் கவுன்சில் உறுப்பினர் ஆர்.எஸ். ரானாவிற்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்திய பார் கவுன்சிலின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும் இதுபோன்ற சம்பவங்களால் சட்டக் கல்வியின் தரம் பாதிக்கப்படும் என்று மாணவர் சமூகம் அஞ்சுகிறது.
