UPDATED : பிப் 24, 2011 12:00 AM
ADDED : பிப் 24, 2011 12:34 PM
அ நிறம் | அளவு
நாட்டிலுள்ள
நிகர்நிலை பல்கலைக்கழகங்களை மதிப்பாய்வு செய்ய கடந்த 2009, ஜூன் 7 ம் தேதி ஒரு நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்தது. அந்தக் குழுவானது, அதே ஆண்டு அக்டோபர் 20 ம் தேதி தனது அறிக்கையை அரசிடம் அளித்தது. அதில் நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து பெற்ற 44 கல்வி நிறுவனங்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவிலான வசதிகளை வைத்திருக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தது. அந்த கல்வி நிறுவனங்களுக்கு தங்களின் குறைகளை சரிசெய்ய 3 வருடங்கள் அவகாசம் தரப்பட்டது போன்ற அனைத்தும் நம் நினைவில் நிற்கும் கடந்தகால நிகழ்வுகள்.அந்த
குறிப்பிட்ட கால அளவுக்குள் குறைகளை சரிசெய்துள்ளதாக கூறும் கல்வி நிறுவனங்களின் விண்ணப்பங்களை ஆய்வுசெய்ய இந்த செயல் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் செயல் கமிட்டி கண்டறியும் உண்மையாக படம் பிடிக்கப்பட்டு பதிவு செய்யப்படும். மேலும் மனிதவளத் துறை இணையதளத்தில் அந்த விவரங்கள் வெளியிடப்படும்.