ஐ.ஐ.எம். மாணவர் சேர்க்கைக்கு தடைவிதிக்க நீதிமன்றம் மறுப்பு
ஐ.ஐ.எம். மாணவர் சேர்க்கைக்கு தடைவிதிக்க நீதிமன்றம் மறுப்பு
UPDATED : பிப் 25, 2011 12:00 AM
ADDED : பிப் 25, 2011 02:56 PM
எனவே ஐ.ஐ.எம். சேர்க்கை நடைமுறைகளில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்று கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடுத்தனர். அதில் அவர்கள், ஐ.ஐ.எம் -களின் சேர்க்கை நடைமுறைகள் ஒன்றுக்கொன்று மாறுபட்டும், குழப்பமாகவும் உள்ளன. சிலர் கேட் தேர்வில் 99% மதிப்பெண்கள் எடுத்திருந்தும் அவர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு வரவில்லை. சில ஐ.ஐ.எம் -கள் பள்ளி தேர்வுகளில் எடுத்த மதிப்பெண்களையும் கணக்கில் எடுக்கின்றன.
எனவே இவற்றில் ஒரு பொதுவான வெளிப்படை தன்மை இருக்க வேண்டும். அதன்பொருட்டு இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்கு அடிப்படையாக விளங்கும் 2010 கேட் தேர்வை நிறுத்தி வைப்பதோடு, ஐ.ஐ.எம் -களின் ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கை நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று தங்களின் மனுவில் கோரியிருந்தனர்.
ஆனால் மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த டெல்லி உயர் நீதிமன்றம், மனிதவளத் துறை மற்றும் நாட்டின் 11 ஐ.ஐ.எம் -கள் ஆகியவற்றிடம் இதுதொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இதற்கான பதிலை வரும் ஏப்ரல் 18 ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு கூறியிருக்கும் நீதிமன்றம், அந்த தேதியிலேயே அடுத்தகட்ட விசாரணையையும் நடத்த உள்ளது.
