சிறப்பு மாணவர்கள் 300 பேர் பிளஸ் 2 தேர்வில் பங்கேற்பு
சிறப்பு மாணவர்கள் 300 பேர் பிளஸ் 2 தேர்வில் பங்கேற்பு
UPDATED : மார் 02, 2011 12:00 AM
ADDED : மார் 02, 2011 12:10 PM
அ நிறம் | அளவு
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று துவங்கும் பிளஸ் 2 தேர்வில், உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர், நரம்பியல் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் நிறைந்த, "டிஸ்லெக்சியா' மாணவர்கள், விபத்தில் கை, கால்களை இழந்தவர்கள் என மொத்தம் 300 மாணவர்கள், சிறப்பு மாணவர்கள் பிரிவில் தேர்வெழுதுகின்றனர். இவர்களுக்கு ஒரு மொழி பாடம் விலக்கு; கூடுதலாக ஒரு மணி நேரம் மற்றும் விடையெழுத தனி நபர் என பல்வேறு சலுகைகள் வழங்கப்படும்.
