தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இந்தியாவில் வேளாண்-விஞ்ஞானிகளுக்கு தட்டுப்பாடு

இந்தியாவில் வேளாண்-விஞ்ஞானிகளுக்கு தட்டுப்பாடு

இந்தியாவில் வேளாண்-விஞ்ஞானிகளுக்கு தட்டுப்பாடு


UPDATED : மார் 05, 2011 12:00 AM

ADDED : மார் 05, 2011 02:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 05, 2011 12:00 AM ADDED : மார் 05, 2011 02:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அக்ரிகல்சுரல் சயின்டிஸ்ட் ரெக்ரூட்மென்ட் போர்ட்(ஏ.எஸ்.ஆர்.பி.) நிர்வாகி சி.டி. மயி, மீரட்டில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்தியாவில் இளநிலை வேளாண் விஞ்ஞானிகள் உருவாவதில் 50% அளவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மூத்த விஞ்ஞானிகள் எண்ணிக்கையில் 20% தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றார்.


ஏ.எஸ்.ஆர்.பி., அக்ரிகல்சுரல் ரிசர்ச் சர்வீஸ் தேர்வினை நடத்துகிறது. சுமார் 290 காலி இளநிலை விஞ்ஞானிகள் மற்றும் மூத்த விஞ்ஞானிகள் பணியிடங்களுக்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது. ஆனால் 130 முதல் 140 பணியிடங்களை மட்டுமே நிரப்ப முடிகிறது.


வேளாண் விஞ்ஞானிகள் பற்றாக்குறையால், வேளாண் பல்கலைக்கழகங்களில் தரமான கல்வியை அளிக்க முடியாமல் போகிறது. கல்வியின் தரம் குறைவதன் விளைவாக திறமையான மாணவர்களின் எண்ணிக்கைக் குறைகிறது.


எனவே பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்துடன் சேர்த்து, மாணவர்களுக்கு தரமான கல்வியைக் கொடுப்பதிலும் அக்கறை செலுத்த வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் நல்ல தரமான விஞ்ஞானிகளை உருவாக்க முடியும். வேளாண் துறைக்கு நல்ல வேளாண் ஆசிரியர்கள் தேவை. மாணவர்களின் தரம் குறைந்து கொண்டே போவதால், இதுதான் தற்போதைய முக்கியத் தேவையாக உள்ளது.


தமிழ்நாடு மற்றும் தார்வாத்தில் செயல்படும் வேளாண் பல்கலைக்கழகங்கள் தன்னிகரற்ற பணிகளை செய்து வருகின்றன. அதோடு ஒப்பிடும்போது பஞ்சாப் மற்றும் பான்ட்நகர் பல்கலைக்கழகங்களில் ஏறக்குறைய  மாணவர்களே இல்லாத நிலைக் காணப்படுகிறது என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us