sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கோவையில் அமைகிறது உலகத் தரம் வாய்ந்த பல்கலை

/

கோவையில் அமைகிறது உலகத் தரம் வாய்ந்த பல்கலை

கோவையில் அமைகிறது உலகத் தரம் வாய்ந்த பல்கலை

கோவையில் அமைகிறது உலகத் தரம் வாய்ந்த பல்கலை


UPDATED : ஆக 09, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Google News

UPDATED : ஆக 09, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற


கோவை:
“உலகத்தரத்துடன் கூடிய ‘வேர்ல்ட் கிளாஸ்’ பல்கலை கோவையில் அமையவுள்ளது,” என, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
கோவையில் அவர், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
இந்தியாவில் உலகத்தரத்துடன் கூடிய ஏழு ‘வேர்ல்ட் கிளாஸ்’ பல்கலைக்கழகத்தை மத்திய அரசு அமைக்க முடிவு செய்துள்ளது. இந்த பல்கலை அமைக்க, கல்வி வளம் மிக்க கோவை தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்பல்கலை அமைக்க 500 ஏக்கர் நிலத்தை, மாநில அரசு கையகப்படுத்திக் கொடுக்கும். இதற்காக ஐந்து  இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
மத்திய குழு, நிலத்தை பார்வையிட்டு முடிவு செய்தபின் நிலம் கையகப்படுத்தப்படும்.  வேர்ல்ட் கிளாஸ் பல்கலை அமைக்க, கோவை பாரதியார் பல்கலையில் இடமிருக்கிறதா என்று ஆய்வு செய்துள்ளோம்.
இந்த பல்கலை ரூ.2,000 முதல் ரூ.3,000 கோடி மதிப்பில் அமையும். கோவையில் வேர்ல்ட் கிளாஸ் பல்கலை அமைக்கப்படுவதால், ஐ.ஐ.எம்., (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்) கல்வி நிறுவனம், திருச்சியில் அமைக்கப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.






      Dinamalar
      Follow us