UPDATED : மார் 07, 2011 12:00 AM
ADDED : மார் 07, 2011 04:15 PM
இணைப்பு பிஎச்.டி., மற்றும் எம்.டெக். பாடப் பிரிவுகள் வரும் கல்வி ஆண்டு ( ஜூலை 2011) முதல் சென்னை பல்கலைக் கழகத்தில் துவக்கப்படுகிறது.
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் தாங்களே கண்டறிந்த, உண்மையான ஆய்வுக் கட்டுரையை சமர்பிக்கலாம்.
ஆராய்ச்சி கல்விக் கழகம் அனுப்பிய இணைப்பு பிஎச்.டி.யை ஜூலை 2011 இல் துவக்குவதற்கான பரிந்துரைக்கு அகடமிக் கவுன்சில் ஏற்கனவே அனுமதி அளித்து விட்டது.
இணைப்பு பிஎச்.டி.யில் சேர சென்னை பல்கலைக் கழகம் அல்லது அதன் முதன்மை பல்கலைக் கழகம் ஒன்றில் 55 மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு பட்ட மேற்படிப்பை படித்திருக்க வேண்டும்.
முதன்மை பல்கலைக் கழக மாணவர்களாக இருந்தாலும், இணைப்பு பல்கலைக் கழக மாணவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு மேற்பார்வையளர் இருப்பதை நிரூபிக்க வேண்டும்.
இதேப்போல வரும் கல்வி ஆண்டில் எம்.டெக். பட்ட மேற்படிப்பையும் சென்னை பல்கலைக் கழகம் அறிமுகப்படுத்துகிறது.
மேலும் தகவல்களுக்கு சென்னை பல்கலைக் கழகத்தின் இணையதளத்தை பார்க்கவும்.
