sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தங்கப்பதக்கம் பெற்றுத்தந்த அபினவ் பிந்த்ராவை பாராட்டி பேரணி

/

தங்கப்பதக்கம் பெற்றுத்தந்த அபினவ் பிந்த்ராவை பாராட்டி பேரணி

தங்கப்பதக்கம் பெற்றுத்தந்த அபினவ் பிந்த்ராவை பாராட்டி பேரணி

தங்கப்பதக்கம் பெற்றுத்தந்த அபினவ் பிந்த்ராவை பாராட்டி பேரணி


UPDATED : ஆக 13, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Google News

UPDATED : ஆக 13, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சீன தலைநகர் பீஜிங்கில் 29வது ஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா, 10 மீட்டர் ‘ஏர் ரைபிள்’ பிரிவில் தங்கம் வென்றார். ஒலிம்பிக் போட்டியில் தனிநபர் பிரிவில் இந்தியா தங்கம் வென்றது இதுவே முதல்முறை.
இதைக் கொண்டாடும் வகையில், கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே., கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள், தேசிய கொடியை கையில் ஏந்தியவாறு கோவை நகரில் ஆகஸ்ட் 12ம் தேதி பேரணி நடத்தினர்.
காந்திபுரம் விரைவுபோக்குவரத்துக்கழக பஸ் ஸ்டாண்ட் அருகே பேரணியை, கோவை மாநகர மேயர் வெங்கடாசலம் துவக்கி வைத்தார். மாநகராட்சி கல்விக்குழு தலைவர் கல்யாணசுந்தரம், கவுன்சிலர் ஷோபனா, கல்லூரி செயலாளர் அஜித்குமார் லால் மோகன், கல்லூரி முதல்வர் பாலசுப்ரமணியம் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த பேரணி, வி.கே.கே., மேனன் ரோடு, டாக்டர் பாலசுந்தரம் ரோடு வழியாக வந்து இறுதியில் கோவை வ.உ.சி., பூங்கா மைதானத்தில் முடிந்தது.
இப்பேரணி பற்றி ஏ.ஜே.கே., கல்லூரி செயலாளர் அஜித்குமார் லால் மோகன் கூறுகையில், “ ஒலிம்பிக் போட்டியில் 28 ஆண்டுகளுக்குப்பின் இந்தியா தங்கப்பதக்கம் வென்ற மகிழ்ச்சியை, கல்லூரி மாணவர்களும் கொண்டாட பேரணி நடத்தியுள்ளோம். இந்த பேரணி, மாணவர்கள் மத்தியில் விளையாட்டை ஊக்கப்படுத்த உதவும்,” என்றார்.






      Dinamalar
      Follow us