sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அறிவோம் நெட் தேர்வு

/

அறிவோம் நெட் தேர்வு

அறிவோம் நெட் தேர்வு

அறிவோம் நெட் தேர்வு


UPDATED : நவ 28, 2024 12:00 AM

ADDED : நவ 28, 2024 08:53 PM

Google News

UPDATED : நவ 28, 2024 12:00 AM ADDED : நவ 28, 2024 08:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உதவித்தொகை, மாணவர் சேர்க்கை, உதவி பேராசிரியர் பணி ஆகியவற்றிற்கான தகுதியை நிர்ணயிக்கும் தேசிய தகுதித் தேர்வை பல்கலைக்கழக மானியக் குழு சார்பில் தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.

முக்கியத்துவம்:

நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் வழங்கப்படும் பிஎச்.டி., படிப்புகளில் சேர்க்கை பெறவும், உதவி பேராசிரியராக பணிபுரியவும், ஜே.ஆர்.எப்., எனும் இளம் ஆராய்ச்சி உதவித்தொகைக்கு தகுதி பெறவும் அவசியம் எழுத வேண்டிய தேர்வு 'நேஷனல் எலிஜிபிலிட்டி டெஸ்ட் - நெட்'. ஜூன் மற்றும் டிசம்பர் என ஆண்டிற்கு இரண்டு முறை நடத்தப்படும் இத்தேர்வில் மொத்தம் 85 துறைகளில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

தேர்வு விபரம்:


இரண்டு தாள்களைக் கொண்ட இத்தேர்வு இடைவேளையின்றி தொடர்ந்து 3 மணிநேரம் நடைபெறுகிறது. கம்ப்யூட்டர் வாயிலாக நடைபெறும் இத்தேர்வில் அனைத்து கேள்விகளும் கொள்குறிவகை வடிவில் கேட்கப்படுகிறது. ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டுமே கேள்விகள் இடம்பெறும். தவறான பதிலுக்கு மதிப்பெண் பிடித்தம் இல்லை.

தகுதிகள்:


அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு கல்வி நிறுவனத்தில், துறை சார்ந்த பிரிவில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 75 சதவீத மதிப்பெண்களுடன் 4 ஆண்டுகால இளநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்களும் விண்ணப்பிக்கலாம். ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர் ஆகியோர் 5 சதவீத மதிப்பெண் தளர்வு உண்டு. தற்போது இறுதியாண்டு பயிலும் மாணவ, மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு:


உதவி பேராசிரியர் பணி மற்றும் பிஎச்.டி., படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்காக இத்தேர்வை எழுதுபவர்களுக்கு எந்த உச்சபட்ச வயதுவரம்பும் இல்லை. ஜே.ஆர்.எப்., உதவித்தொகை பெற விரும்புபவர்களுக்கான அதிகபட்ச வயது 30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகால தளர்வு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை:

https://ugcnetdec2024.ntaonline.in/site/login எனும் இணையபக்கம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க கடைசி நாள்:
டிசம்பர் 10

தேர்வு நாட்கள்:

2025 ஜனவரி 1 முதல் 19 வரை

விபரங்களுக்கு:

https://ugcnet.nta.ac.in/






      Dinamalar
      Follow us