sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அரசு பள்ளிகளில் கற்றல் ஆய்வு; கூகுள் மீட் மூலம் நடத்த ஏற்பாடு

/

அரசு பள்ளிகளில் கற்றல் ஆய்வு; கூகுள் மீட் மூலம் நடத்த ஏற்பாடு

அரசு பள்ளிகளில் கற்றல் ஆய்வு; கூகுள் மீட் மூலம் நடத்த ஏற்பாடு

அரசு பள்ளிகளில் கற்றல் ஆய்வு; கூகுள் மீட் மூலம் நடத்த ஏற்பாடு


UPDATED : ஆக 19, 2025 12:00 AM

ADDED : ஆக 19, 2025 09:35 AM

Google News

UPDATED : ஆக 19, 2025 12:00 AM ADDED : ஆக 19, 2025 09:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:
அரசு பள்ளிகளில் மாணவர்கள் கற்றல் குறித்து, கூகுள் மீட் செயலி மூலம் மதிப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, ஆல் பாஸ் திட்டம் அமலில் உள்ளது. இதனால், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம், எழுதுவது, வாசிப்பது உள்ளிட்ட அடிப்படை திறன்களில் தேக்கம் நிலவி வருகிறது. இதை தடுக்க, பள்ளி கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஒவ்வொரு கல்வியாண்டும், கற்றல் அடைவு திறன் குறித்து மதிப்பீடு செய்யப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில், மூன்று, ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு, ஓ.எம்.ஆர்., ஷீட் மூலம், ஆசிரியர் கல்வி மாணவர்களை தன்னார்வலர்களாக நியமித்து, பிப்ரவரியில் கற்றல் அடைவு மதிப்பீடு நடத்தப்பட்டது.

அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு பள்ளியிலும் அதன் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, நடவடிக்கை எடுக்க பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. இதில், மாதந்தோறும் மாணவர்களின் கற்றல் அடைவை மதிப்பீடு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அனைத்து அரசு துவக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கும் டேப் கணினி மற்றும் இணைய வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ள நிலையில், கூகுள் மீட் மூலம் மாணவர்களிடம் மதிப்பீடு செய்யும் முறை குறித்து, வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப் பட்டுள்ளன. முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில், மாணவர்களிடம் இம்மதிப்பீடு செய்யப்பட உள்ளது.

இது குறித்து, பள்ளி கல்வித்துறை வெளியிட்டு உள்ள சுற்றறிக்கை:

பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட டேப் கணினியில் கூகுள் மீட் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

இணைய வசதி, ஸ்பீக்கர் வசதி ஆகியவை நன்றாக வேலை செய்வதை உறுதி செய்ய வேண்டும். கற்றல் ஆய்வு நடைபெறும் நாள், நேரம், கூகுள் மீட் லிங்க் ஆகியவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் பள்ளிகளுக்கு தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us