sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மருத்துவ மாணவியரிடம் சீண்டல் விசாரணை அறிக்கை அனுப்பிவைப்பு

/

மருத்துவ மாணவியரிடம் சீண்டல் விசாரணை அறிக்கை அனுப்பிவைப்பு

மருத்துவ மாணவியரிடம் சீண்டல் விசாரணை அறிக்கை அனுப்பிவைப்பு

மருத்துவ மாணவியரிடம் சீண்டல் விசாரணை அறிக்கை அனுப்பிவைப்பு


UPDATED : பிப் 08, 2025 12:00 AM

ADDED : பிப் 08, 2025 09:50 AM

Google News

UPDATED : பிப் 08, 2025 12:00 AM ADDED : பிப் 08, 2025 09:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:
சேலம், இரும்பாலை அரசு மருத்துவ கல்லுாரியில் ஆய்வக தொழில்நுட்பனராக பணிபுரியும் ஒருவர், பயிற்சி மாணவியரிடம் தகாத முறையில் நடந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து, 80 மாணவியர் கையெழுத்திட்டு, கல்லுாரி முதல்வருக்கு புகார் அனுப்பினர்.

கல்லுாரி விசாகா கமிட்டி சேர்மன் சுபா தலைமையில் குழுவினர், கடந்த, 31, 3, 4ல் விசாரணை நடத்தினர். அதில் மாணவியரின் வாட்ஸாப் மொபைலுக்கு தவறான படங்கள், குறுந்தகவல் அனுப்பி பேசியது தெரிந்தது. இதுதொடர்பான அறிக்கை சீலிடப்பட்டு, சென்னை மருத்துவ கல்வி இயக்ககத்துக்கு, கடந்த, 4ல் அனுப்பப்பட்டது.

இதுகுறித்து டீன் தேவிமீனாள் கூறுகையில், இதுகுறித்து எந்த தகவலையும் வெளியிடக்கூடாது என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளால் எதுவும் சொல்ல இயலாது என்றார்.

மருத்துவ கல்வி இயக்குனர் சங்குமணி கூறுகையில், அறிக்கையை முழுமையாக ஆராயவில்லை. இதுதொடர்பான நடவடிக்கை குறித்து வரும், 10ல் தெரிவிக்கப்படும் என்றார்.






      Dinamalar
      Follow us