கூட்டுறவு பட்டயப்பயிற்சி துணைத்தேர்வு பழைய பாடத்திட்டத்தில் எழுத அழைப்பு
கூட்டுறவு பட்டயப்பயிற்சி துணைத்தேர்வு பழைய பாடத்திட்டத்தில் எழுத அழைப்பு
UPDATED : பிப் 08, 2025 12:00 AM
ADDED : பிப் 08, 2025 09:53 AM
சேலம்:
கூட்டுறவு பட்டயப்பயிற்சி துணைத்தேர்வை பழைய பாடத்திட்டத்தில் எழுத விண்ணப்பிக்கலாம்.
சேலம் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண் நிலைய அறிக்கை:
தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் ஒரு அங்கமான சேலம் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண் நிலையத்தில், 2002 முதல், 2021 வரை, 7 பாடத்திட்டங்கள் கொண்ட முழு நேர கூட்டுறவு மேலாண் பட்டயப்பயிற்சி, அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண் பட்டயப்பயிற்சி நடத்தப்பட்டு வந்தது.
2022 முதல், அனைத்து கூட்டுறவு மேலாண் நிலையங்களில் புது பாடத்திட்டப்படி(10 பாடங்கள்), இரு பருவ முறையாக, பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது.ஆனால் பழைய பாடத்திட்டப்படி, 7 பாடங்களில் தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்களுக்கு துணைத்தேர்வை, மார்ச், 2025ல் நடத்த, கூட்டுறவு ஒன்றியத்தால் திட்டமிடப்பட்டுள்ளது.
அதனால் வரும், 14க்குள், உரிய ஆவணங்களுடன், மேலாண் நிலைய அலுவலகத்தில் வந்து விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு, 10, பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் நகல், மார்பளவு புகைப்படம் - 2, இறுதியாக தேர்வு எழுதிய நுழைவுச்சீட்டு நகலை இணைத்து, தேர்வு எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும். விபரம் பெற, சேலம், காமராஜர் நகர் காலனியில் உள்ள நாச்சியப்பா கூட்டுறவு மேலாண் நிலையத்தை நேரிலோ அல்லது 0427 -2240944 என்ற எண்ணிலோ அணுகலாம்.