UPDATED : ஏப் 10, 2026 07:21 PM
ADDED : ஏப் 10, 2026 07:23 PM
அ நிறம் | அளவு
மதுரை:
மதுரை காந்தி மியூசியத்தில் காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனம், சவுராஷ்டிரா கல்லுாரிக்கு இடையிலான காந்திய சிந்தனை குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
தாளாளர் குமரேஷ் முன்னிலையில் முதல்வர் சீனிவாசன், மியூசிய செயலாளர் நந்தாராவ், முதல்வர் தேவதாஸ், ஒருங்கிணைப்பாளர் கவிதா ஆகியோர் கையெழுத்திட்டனர்.
கல்லூரியில் காந்திய சிந்தனை கருத்தரங்கு நடத்துவது, சர்வோதயம், சுகாதாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.
தேர்வு கட்டுப்பாட்டாளர் துரைசாமி, கல்வி விவகாரங்களின் தலைவர் கவிதா, உதவி பேராசிரியர் சிவக்குமார், பேராசிரியர் கலைவாணி கலந்து கொண்டனர்.
