UPDATED : அக் 07, 2025 09:04 AM
ADDED : அக் 07, 2025 09:06 AM

சென்னை:
“அரசு கல்லுாரிகளில், 4,000 உதவி பேராசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,” என, தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார்.
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், சென்னை ஐ.ஐ.டி.,யுடன் இணைந்து, பார்வை மாற்றுத்திறன் மாணவர்கள் அறிவியலை அறிந்து கொள்ளும் வகையில், 'அறிவியல் அணுகல் கூடம்' ஒன்றை, கோட்டூர்புரம் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் புதிதாக நிறுவி உள்ளது.
இந்த மையத்தை, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர்.
அதன்பின் அமைச்சர் கோவி.செழியன், செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழக அரசு கல்லுாரிகளில், 4,000 உதவி பேராசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,” என்றார்.