sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பே பால், நோக்கியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்; சென்னையில் அமைகிறது செமிகண்டக்டர் மையம்!

/

பே பால், நோக்கியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்; சென்னையில் அமைகிறது செமிகண்டக்டர் மையம்!

பே பால், நோக்கியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்; சென்னையில் அமைகிறது செமிகண்டக்டர் மையம்!

பே பால், நோக்கியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்; சென்னையில் அமைகிறது செமிகண்டக்டர் மையம்!


UPDATED : ஆக 31, 2024 12:00 AM

ADDED : ஆக 31, 2024 03:18 PM

Google News

UPDATED : ஆக 31, 2024 12:00 AM ADDED : ஆக 31, 2024 03:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்:
அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் 8 நிறுவனங்கள், தமிழகத்தில் தொழில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்டன.

ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள், முதலீடு, வேலைவாய்ப்பு பற்றிய விவரம் வருமாறு:

* சென்னை சிறுசேரி சிப்காட்டில் ரூ.450 கோடியில் நோக்கியா நிறுவனம் சார்பாக தொழிற்சாலை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதனால் 100 பேருக்கு வேலை கிடைக்கும்.

* PAY PAL நிறுவனத்துடன் ஒப்பந்தத்தின் மூலம் சுமார் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

* சென்னையில் செமி கண்டக்டர் உற்பத்தி தொழில்நுட்ப மையம் அமைகிறது. ஏ.ஐ., தொழில்நுட்ப வசதிகள் கொண்ட அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சி மையமாக அமைக்க applied materials நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

* செம்மஞ்சேரியில் மைக்ரோ சிப் நிறுவனம் ரூ.250 கோடியில் முதலீடு செய்ய உள்ளது. இதனால் 1500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

* மதுரை எல்காட் வடபழஞ்சியில் ரூ.50 கோடியில் புதிய தொழில்நுட்ப மையத்தை இன்பின்க்ஸ் அமைக்கிறது.

* கோவை சூலூரில் செமி கண்டக்டர் உபகரண ஆலையை ஈல்டு என்ஜினியரிங் நிறுவனம் அமைக்கிறது. ரூ.150 கோடியில் அமையும் ஆலை மூலம் 300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

* செங்கல்பட்டில் ரூ.400 கோடி முதலீட்டில் ஓமியம் நிறுவனத்தின் உற்பத்தி மையம் அமைய உள்ளது. இதனால் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

* geakminds நிறுவனத்துடன் ஏற்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், 500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

* சான்பிரான்சிஸ்கோவில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் இதுவரை 8 நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் துவங்க அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொண்டுள்ளன.






      Dinamalar
      Follow us