தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பல்கலையில் இசை நிகழ்ச்சி

பல்கலையில் இசை நிகழ்ச்சி

பல்கலையில் இசை நிகழ்ச்சி


UPDATED : ஜூலை 17, 2026 08:39 AM

ADDED : ஜூலை 17, 2026 08:39 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 17, 2026 08:39 AM ADDED : ஜூலை 17, 2026 08:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிதம்பரம்:
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் நடந்த இசை நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தஞ்சை தென்னக கலைப் பண்பாட்டு மையம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக நுண்கலைப் புலம் சார்பில் 'தேவாரமும் தமிழிசையும்' எனும் சிறப்பு இசை நிகழ்ச்சி நடந்தது.

அண்ணாமலை பல்கலை அறிவியல் துறை ஹைடெக் அரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு தென்னக பண்பாட்டு மைய நிர்வாக அலுவலர் சீனிவாசன் வரவேற்றார். பல்கலை நுண்கலை புல முதல்வர் அருட்செல்வி வாழ்த்துரை வழங்கினார்.

தொடர்ந்து, திருத்தணி சுவாமிநாதன் தேவாரப் பாடல்கள் படினார். சிக்கில் குருசரண் தமிழ்க் கீர்த்தனைகள், கோவிந்தராஜன் வயலின், நடராஜ ரத்ன தீக்ஷிதர் மிருதங்கம், திருச்சி ஸ்ரீ கிருஷ்ணா கடம் இசைத்தனர்.

நிகழ்ச்சியில் புலமுதல்வர்கள் ஸ்ரீராம், அருள், பாஸ்கர், சரண்யா மற்றும் பலர் பங்கேற்றனர். இசைத்துறை தலைவர் சுதர்சன் நன்றி கூறினார். நிகழ்ச்சியை இசைத்துறை இணை பேராசிரியர் குமார் தொகுத்து வழங்கினார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us