தேசிய தற்காப்பு கலை போட்டிகள் தமிழக அணி ஒட்டு மொத்த சாம்பியன்
தேசிய தற்காப்பு கலை போட்டிகள் தமிழக அணி ஒட்டு மொத்த சாம்பியன்
UPDATED : பிப் 16, 2026 12:52 PM
ADDED : பிப் 16, 2026 12:56 PM

ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அதியமான் பொறியியல் கல்லுாரி உள்விளையாட்டரங்கில், தேசிய அளவிலான, 17வது நமோ டிராபி தற்காப்பு கலை போட்டிகள் நடந்தன.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உட்பட மொத்தம், 9 மாநிலங்களிலிருந்து, 1,500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். குங்பூ, கராத்தே, சிலம்பம் மற்றும் டேக்வாண்டோ ஆகிய போட்டிகள் பல்வேறு பிரிவுகளாக நடத்தப்பட்டன.
தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற கிருஷ்ணகிரி மாவட்ட இந்தியன் குங்பூ அகாடமி குழுவினர், 300க்கும் மேற்பட்ட பதக்கங்களை குவித்து, 2026ம் ஆண்டிற்கான ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை தட்டி சென்றனர். வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைளுக்கான பாராட்டு விழா நேற்று நடந்தது.
தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோராமணி, வீரர், வீராங்கனைகளுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
தமிழ்நாடு குங்பூ அசோசியேஷன் பொதுச்செயலாளர் தங்கம், துணைத்தலைவர் மதன், இணைச்செயலாளர் கார்த்திக், சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

