UPDATED : ஜன 23, 2026 01:19 PM
ADDED : ஜன 23, 2026 01:22 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஆர்.கே.எஸ். கல்லுாரியில் தேசிய கருத்தரங்கம் நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.சண்முகம் கலை அறிவியல் கல்லுாரி, கணினி பயன்பாட்டியல் துறை சார்பாக தேசிய கருத்தரங்கம் நடந்தது. கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். கல்லுாரி துணை முதல்வர் ஜான்விக்டர், டீன் அசோக் முன்னிலை வகித்தனர். மாணவி சங்கரி வரவேற்றார், கல்லுாரி கணினி பயன்பாட்டியல் துறை தலைவர் தங்கவேலு சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.
பெங்களூரு ஆச்சார்யா கல்வி நிறுவனங்களின் இணை பேராசிரியர் விபின்சந்தர் செல்வராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கல்லுாரி வளாகத்திலிருந்து கார்ப்பரேட் உலகிற்குள் நுழைவதற்கு தேவையான தகுதிகள் குறித்தும் விளக்கினார்.
கல்லுாரி மாணவ, மாணவிகள் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவி பேராசிரியர்கள் கயல்விழி, ஹேமவர்தினி செய்திருந்தனர். மாணவி சூசன்னா நன்றி கூறினார்.

