sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தனியார் கல்லுாரிகளுக்கு ஆதரவாக புதிய தடை: அன்புமணி குற்றச்சாட்டு

/

தனியார் கல்லுாரிகளுக்கு ஆதரவாக புதிய தடை: அன்புமணி குற்றச்சாட்டு

தனியார் கல்லுாரிகளுக்கு ஆதரவாக புதிய தடை: அன்புமணி குற்றச்சாட்டு

தனியார் கல்லுாரிகளுக்கு ஆதரவாக புதிய தடை: அன்புமணி குற்றச்சாட்டு


UPDATED : ஜூலை 08, 2025 12:00 AM

ADDED : ஜூலை 08, 2025 08:52 AM

Google News

UPDATED : ஜூலை 08, 2025 12:00 AM ADDED : ஜூலை 08, 2025 08:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
அரசு கல்லுாரிகளில், பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர் இடங்களை நிரப்ப தி.மு.க., அரசு தடை விதித்துள்ளதாக, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை:


அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை முடிந்த பின்னரும், காலியாக இருக்கும் எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கான இடங்களை, எம்.பி.சி.,க்களை கொண்டும், எம்.பி.சி.,க்கான இடங்களை, பி.சி., வகுப்பினரைக் கொண்டும் நிரப்ப வேண்டும். பி.சி.,க்களுக்கான இடங்களை, பிற வகுப்பினரைக் கொண்டும் பி.சி., முஸ்லிம்களுக்கான இடங்களை, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைக் கொண்டும் நிரப்ப வேண்டும். இதுதான் விதி.

ஆனால், பல அரசு கல்லுாரிகளில் பி.சி., வகுப்பினருக்கான காலியிடங்கள் மட்டும் இன்னும் நிரப்பப்படவில்லை. அதற்காக, காத்திருந்த மாணவர்கள், தனியார் கல்லுாரிகளில் சேர்கின்றனர். தனியார் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவே, இது போன்று நடக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

பி.சி., எனப்படும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடங்களை நிரப்ப, வாய்மொழியாக தடை விதிக்கும் அதிகாரத்தை, கல்லுாரி கல்வி ஆணையருக்கு வழங்கியது யார்? சமூக நீதிக்கு எதிரான இந்த நடவடிக்கைக்கு, அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us