sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஒழுக்கத்துடனான கல்வி புதிய சி.இ.ஓ. உறுதி

/

ஒழுக்கத்துடனான கல்வி புதிய சி.இ.ஓ. உறுதி

ஒழுக்கத்துடனான கல்வி புதிய சி.இ.ஓ. உறுதி

ஒழுக்கத்துடனான கல்வி புதிய சி.இ.ஓ. உறுதி


UPDATED : நவ 06, 2025 07:40 AM

ADDED : நவ 06, 2025 07:41 AM

Google News

UPDATED : நவ 06, 2025 07:40 AM ADDED : நவ 06, 2025 07:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:
'ஒவ்வொரு பள்ளியிலும் ஒழுக்கத்துடன் கூடிய கல்வி கற்றுத்தரப்படும். கல்வியாண்டில் சிறந்த இடத்தை திருப்பூர் கல்வி மாவட்டம் பெற அனைத்து முயற்சிகளும் உத்வேகத்துடன் மேற்கொள்ளப்படும்,' என, முதன்மை கல்வி அலுவலர் புனித அந்தோணியம்மாள் தெரிவித்தார்.

கோவை மாவட்ட கல்வி அலுவலராக இருந்த புனித அந்தோணியம்மாள், திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக மாற்றப்பட்டார்.

நேற்று முன்தினம் இரவு அறிவிப்பு வந்த நிலையில், புதிய சி.இ.ஓ., நேற்று மாலை திருப்பூர் கலெக்டர் அலுவலக ஐந்தாவது தளத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், பொறுப்பேற்றுக்கொண்டார்.

மாவட்ட கல்வி அலுவலர் காளிமுத்து மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக அதிகாரிகள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

முதன்மை கல்வி அலுவலர் கூறுகையில், ''ஒவ்வொரு பள்ளியிலும் ஒழுக்கத்துடன் கூடிய கல்வி கற்றுத்தர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். பொதுத்தேர்வில் கூடுதல் தேர்ச்சி சதவீதம் எட்டுவதற்கான பணிகளுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் தரப்படும். நடப்பு கல்வியாண்டில் சிறந்த இடத்தை திருப்பூர் கல்வி மாவட்டம் பெறும்; அதற்கான அனைத்து முன்னெடுப்புகளும் ஆசியர்கள் ஒத்துழைப்பு, உத்வேகத்துடன் மேற்கொள்ளப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us