sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் இனி மதிப்பெண் சரிபார்ப்பு இல்லை

/

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் இனி மதிப்பெண் சரிபார்ப்பு இல்லை

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் இனி மதிப்பெண் சரிபார்ப்பு இல்லை

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் இனி மதிப்பெண் சரிபார்ப்பு இல்லை


UPDATED : பிப் 14, 2026 11:35 AM

ADDED : பிப் 14, 2026 11:37 AM

Google News

UPDATED : பிப் 14, 2026 11:35 AM ADDED : பிப் 14, 2026 11:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:
'இந்தாண்டு முதல் பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள்கள், 'டிஜிட்டல்' முறையில் திருத்தப்படுவதால் இனி, மதிப்பெண் சரிபார்ப்புக்கு அவசியம் இருக்காது' என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், இந்தாண்டுக்கான 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகளை நடத்த தயாராகி வருகிறது.

இந்த ஆண்டுத் தேர்வுகளில் பல்வேறு மாற்றங்களை செய்துள்ள வாரியம், இது குறித்த தெளிவான விளக்கங்களை பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நேற்று வழங்கியது.

'ஆன்லைன்' வாயிலாக நடந்த கூட்டத்தில் பல்வேறு பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

இது குறித்து சி.பி.எஸ்.இ., தேர்வு கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் கூறியதாவது:

சி.பி.எஸ்.இ.,யின் கீழ் நடத்தப்படும் 10 மற்றும் பிளஸ் 2 தேர்வுகளை இந்தாண்டு 46 லட்சம் பேர் எழுத உள்ளனர். இந்தாண்டின் மிக முக்கிய மாற்றமாக, பிளஸ் 2 விடைத்தாள்கள் முதன்முதலில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, திரைவழி மதிப்பீடு முறையில் திருத்தப்பட உள்ளன.

மதிப்பீட்டு பணியில் தவறுகளை குறைக்கவும், விரைவாக முடிவுகளை வெளியிடவும் இந்த ஆண்டு முதல் டிஜிட்டல் முறையில் விடைத்தாள்கள் திருத்தப்பட உள்ளன.

இதனால், இனி பிளஸ் 2 விடைத்தாள்களின் மதிப்பெண்களை சரிபார்க்க முடியாது. பழைய முறையில், மாணவர்கள் மொத்த மதிப்பெண்கள் அல்லது விடுபட்ட மதிப்பெண்களில் உள்ள முரண்பாடுகளை களைய, அவற்றை சரிபார்க்கும் முயற்சியில் இறங்குவர்.

புதிய டிஜிட்டல் மதிப்பீட்டுத் திட்டத்தில், இது போன்ற முரண்பாடுகள் ஆரம்பத்திலேயே நீக்கப்படும். இருப்பினும், 10ம் வகுப்பு விடைத்தாள்களின் மதிப்பீடு, முன்பு போல காகித முறையிலேயே தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us