sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஆசிரியர்களுக்கு இணையவழி பயிற்சி; ஜன.,10க்குள் அறிக்கை அனுப்ப உத்தரவு

/

ஆசிரியர்களுக்கு இணையவழி பயிற்சி; ஜன.,10க்குள் அறிக்கை அனுப்ப உத்தரவு

ஆசிரியர்களுக்கு இணையவழி பயிற்சி; ஜன.,10க்குள் அறிக்கை அனுப்ப உத்தரவு

ஆசிரியர்களுக்கு இணையவழி பயிற்சி; ஜன.,10க்குள் அறிக்கை அனுப்ப உத்தரவு


UPDATED : டிச 20, 2024 12:00 AM

ADDED : டிச 20, 2024 10:00 AM

Google News

UPDATED : டிச 20, 2024 12:00 AM ADDED : டிச 20, 2024 10:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:
மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான கல்வி குறித்த இணையவழி பயிற்சியை, ஜன., 10 க்குள் முடித்து, அறிக்கையை அனுப்பி வைக்க, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சிறப்பு கவனம் தேவையுடைய குழந்தைகளுக்கான கல்வி வழங்குவது குறித்து, ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வகுப்பு வரை பாடம் நடத்தும் அனைத்து ஆசிரியர்களுக்கும், இணையவழியில் பயிற்சியளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி கடந்த, 16 முதல், ஏழு கட்டங்களாக எமிஸ் இணையதளத்தில், எல்.எம்.எஸ்., போர்டல் வாயிலாக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.இதில், மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 21 வகையான குறைபாடு குறித்த முன்னோட்டம், உடல், உணர்திறன், அறிவு சார் குறைபாடு உள்ளிட்ட ஏழு புத்தகங்கள் வழங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. அனைத்து ஆசிரியர்களும், ஜன.,10க்குள் பயிற்சியை நிறைவு செய்து, முன்னேற்ற அறிக்கையை இ-மெயில் மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.






      Dinamalar
      Follow us