தமிழில் 8 பேர் மட்டுமே சதம்: கணிதத்தில் அதிகம்: முழு விபரம் இதோ
தமிழில் 8 பேர் மட்டுமே சதம்: கணிதத்தில் அதிகம்: முழு விபரம் இதோ
UPDATED : மே 10, 2024 12:00 AM
ADDED : மே 10, 2024 10:57 AM

சென்னை:
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. அதில் தமிழில் 8 பேர் மட்டுமே நூற்றுக்கு நூறு எடுத்தனர். அதிகபட்சமாக கணிதத்தில் 20,691 மாணவர்கள் நூற்றுக்கு நூறு எடுத்தனர்.
இது குறித்த முழு தகவல்கள்:
100 சதவீத மதிப்பெண்கள் பெற்ற மாவர்களின் எண்ணிக்கை
தமிழ் -8 பேர்
ஆங்கிலம்415 பேர்
கணிதம் 20691 பேர்
அறிவியல் 5104 பேர்
சமூக அறிவியல் 4428 பேர்
பள்ளிகள் வகைப்பாடு வாரியான தேர்ச்சி விகிதம்
அரசுப் பள்ளிகள் -87.90 %
அரசு உதவி பெறும் பள்ளிகள் - 91.77%
தனியார் சுயநிதிப் பள்ளிகள்- 97.43%
இருபாலர் பள்ளிகள்- 91.93%
பெண்கள் பள்ளிகள்- 93.80%
ஆண்கள் பள்ளிகள்- 83.17%
பாடவாரியாக தேர்ச்சி விகிதம்
தமிழ் மற்றும் இதர மொழிப்பாடம்- 96.85%
ஆங்கிலம் -99.15%
கணிதம் -96.78%
அறிவியல்- 96.72%
சமூக அறிவியல்- 95.74%
மாற்றுத்திறனாளி மாணவர்கள் 13,510 பேர் தேர்வு எழுதினர். அதில் 12,491 பேர் (92.45%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்260 சிறைவாசிகள் தேர்வு எழுதினர். அதில் 228 பேர் (87.69%)தேர்ச்சி பெற்றனர்.