sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகலாம்: அமைச்சருடன் அதிகாரிகள் ஆலோசனை

/

பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகலாம்: அமைச்சருடன் அதிகாரிகள் ஆலோசனை

பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகலாம்: அமைச்சருடன் அதிகாரிகள் ஆலோசனை

பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகலாம்: அமைச்சருடன் அதிகாரிகள் ஆலோசனை


UPDATED : ஏப் 26, 2024 12:00 AM

ADDED : ஏப் 26, 2024 10:17 AM

Google News

UPDATED : ஏப் 26, 2024 12:00 AM ADDED : ஏப் 26, 2024 10:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை, திட்டமிட்டபடி, மே 6ம் தேதி, ஆன்லைனில் வெளியிட பள்ளிக்கல்வி துறை முடிவு செய்துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், இந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் முடிந்தன. பிளஸ் 2 தேர்வுக்கு விடைத்தாள் திருத்தும் பணி முடிந்து விட்டது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத்தேர்வுக்கான விடைத்தாள்களின் திருத்தம் நடந்து வருகிறது. இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்களை சரிபார்க்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதைத்தொடர்ந்து, திட்டமிட்டபடி ஏற்கனவே அறிவித்த தேதியான, மே 6ல் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறை, லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், பள்ளிக்கல்வி அமைச்சர் தரப்பில், தேர்வு முடிவுகளை வெளியிடாமல், நேரடியாக அரசு தேர்வு துறையின் இணையத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பள்ளிக்கல்வியின் வரும் கல்வி ஆண்டுக்கான பணிகள் மற்றும் மாணவர் சேர்க்கை குறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகளுடன், அமைச்சர் மகேஷ் சென்னையில் உள்ள தன் இல்லத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார்.

பள்ளிக்கல்வி செயலர் குமரகுருபரன், பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி உள்ளிட்ட அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். கோடை விடுமுறைக்கு பின், ஜூன் 3ம் தேதி அல்லது 5ம் தேதி பள்ளிகள் திறப்பு என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு கோடை காலத்தில், வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால், கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு தேதியை தள்ளி வைப்பது குறித்து ஆலோசனை செய்தனர். ஆனால், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என, தெரிய வந்துள்ளது.






      Dinamalar
      Follow us