sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

முறைகேடு பேராசிரியர்கள் பணியாற்ற நிரந்தர தடை

/

முறைகேடு பேராசிரியர்கள் பணியாற்ற நிரந்தர தடை

முறைகேடு பேராசிரியர்கள் பணியாற்ற நிரந்தர தடை

முறைகேடு பேராசிரியர்கள் பணியாற்ற நிரந்தர தடை


UPDATED : ஆக 02, 2024 12:00 AM

ADDED : ஆக 02, 2024 09:13 AM

Google News

UPDATED : ஆக 02, 2024 12:00 AM ADDED : ஆக 02, 2024 09:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
முறைகேடாக பல கல்லூரிகளில் பணியாற்றிய பேராசிரியர்களுக்கு அண்ணா பல்கலையின் கீழ் பணியாற்றுவதில் இருந்து நிரந்தர தடை விதிப்பதாக அண்ணா பல்கலை துணை வேந்தர் வேல்ராஜ் கூறியுள்ளார்.

சென்னை கால்நடை மருத்துவ பல்கலை விழாவில் பங்கேற்ற அண்ணா பல்கலை துணை வேந்தர் ஆர்.வேல்ராஜ் அளித்த பேட்டி:


அண்ணா பல்கலையின் கீழ் உள்ள பொறியியல் கல்லுாரிகளில், ஆதார் எண்ணை முறைகேடாக பயன்படுத்தி, பேராசிரியர்கள் சிலர் பல கல்லுாரிகளில் பணியாற்றியது தெரியவந்தது. இதுதொடர்பான அறிக்கையை, கவர்னரிடம் தாக்கல் செய்துள்ளோம்.
கடந்த 2022 - 23ம் கல்வியாண்டில், 292 கல்லுாரிகளிலும், 2023 - 24ல், 295 கல்லுாரிகளிலும் முறைகேடுகள் நடந்ததாக கண்டறிந்துள்ளோம். இந்த கல்லுாரிகளுக்கு ஒரு வாரத்தில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
இந்த விவகாரத்தில், உயர் கல்வித்துறையும் கமிட்டி அமைத்துள்ளது. கல்லுாரிகள் தரும் விளக்கத்தை கமிட்டிக்கு அனுப்ப உள்ளோம். வரும் காலங்களில், இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதில், பேராசிரியர்கள் மீது தவறா; கல்லுாரிகள் மீது தவறா என்ற விசாரணை நடந்து வருகிறது. தவறு செய்த பேராசிரியர்கள், அண்ணா பல்கலையின் கீழ் பணியாற்றுவதில் இருந்து நிரந்தர தடை விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us