sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

போதை இல்லா நகரமாக மாற்ற திட்டம்; மாணவர்களுக்கு விரைவில் ரத்த பரிசோதனை

/

போதை இல்லா நகரமாக மாற்ற திட்டம்; மாணவர்களுக்கு விரைவில் ரத்த பரிசோதனை

போதை இல்லா நகரமாக மாற்ற திட்டம்; மாணவர்களுக்கு விரைவில் ரத்த பரிசோதனை

போதை இல்லா நகரமாக மாற்ற திட்டம்; மாணவர்களுக்கு விரைவில் ரத்த பரிசோதனை


UPDATED : டிச 01, 2025 08:01 PM

ADDED : டிச 01, 2025 08:02 PM

Google News

UPDATED : டிச 01, 2025 08:01 PM ADDED : டிச 01, 2025 08:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெலகாவி:
''பெலகாவியை போதை இல்லாத நகரமாக மாற்ற பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்யப்படும்,'' என, நகர போலீஸ் கமிஷனர் பூஷன் போர்சே தெரிவித்தார்.

பெலகாவியில் நேற்று அவர் அளித்த பேட்டி:


கடந்த ஆறு மாதங்களில் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக, 50 வழக்குகள் பதிவாகி, 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல்காரர்களின் இலக்கு, இளைஞர்கள் தான். இளைஞர்கள் இந்நாட்டின் சொத்து. பள்ளி, கல்லுாரி அளவில் போதைப்பொருள் பயன்படுத்தி சிக்கினால், அவர்களின் எதிர்காலம் பாழாகிவிடும்.

ஒன்பது, 10ம் வகுப்பு மாணவர்கள் உட்பட கல்லுாரி மாணவர்களும் போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையாகி இருப்பது துரதிர்ஷ்டம்.

இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி, தங்கள் எதிர்காலத்தை நாசமாக்கிக் கொள்கின்றனர். இதை தீவிரமாக எடுத்துக் கொண்டு, பெலகாவியை போதை இல்லாத நகரமாக மாற்ற உறுதி பூண்டுள்ளோம்.

பள்ளி, கல்லுாரிகளில், மாணவர்களிடம் ரத்த பரிசோதனை செய்ய மாவட்ட கலெக்டர், கல்வி துறை அனுமதி அளித்துள்ளனர். எனவே, அரசு, தனியார் பள்ளிகளில் ஒன்பது, 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் ரத்தம், சிறுநீர் மாதிரிகள் சேகரிக்கப்படும். இதற்காக அவர்களின் பெற்றோரிடம் ஒப்புதல் பெறப்படும்.

போதைப்பொருள் பயன்படுத்திய மாணவர்களை குற்றவாளிகளாக கருதமாட்டோம். மாறாக, பாதிக்கப்பட்டவர்களாக கருதப்படுவர். அவர்களுக்கு அரசு, தனியார் மறுவாழ்வு மையத்தில் தகுந்த ஆலோசனை வழங்கப்பட்டு, போதைப் பழக்கத்தை கைவிட ஏற்பாடு செய்யப்படும்.

பள்ளி, கல்லுாரிகளில் 'கியூஆர்' குறியீடு ஒட்டப்பட்டுள்ளது. போதைப்பொருள் விற்பனை, பயன்படுத்துபவர்கள் பற்றி தகவல் தெரிந்தால், அதை 'ஸ்கேன்' செய்து அனுப்பலாம். தகவல் அளித்தவர்கள் பெயர் வெளியிடப்படாது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us