sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பிளஸ் 2 பொது தேர்வு துவக்கம் நீலகிரியில் 34 பேர் ஆப்சென்ட்

/

பிளஸ் 2 பொது தேர்வு துவக்கம் நீலகிரியில் 34 பேர் ஆப்சென்ட்

பிளஸ் 2 பொது தேர்வு துவக்கம் நீலகிரியில் 34 பேர் ஆப்சென்ட்

பிளஸ் 2 பொது தேர்வு துவக்கம் நீலகிரியில் 34 பேர் ஆப்சென்ட்


UPDATED : மார் 03, 2026 03:09 PM

ADDED : மார் 03, 2026 03:14 PM

Google News

UPDATED : மார் 03, 2026 03:09 PM ADDED : மார் 03, 2026 03:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில், மேல்நிலை இரண்டாமாண்டு பொது தேர்வு நேற்று துவங்கியது. தமிழ் தேர்வில் பள்ளி மாணவ, மாணவியரில் மொத்தம், 5,728 பேரில், 5,680 பேர் தேர்வு எழுதினர்.

மேல்நிலை இரண்டாமாண்டு பொது தேர்வு நேற்று துவங்கியது. அதில், நீலகிரி மாவட்டத்தில் நடந்த மலையாளப் பாடத்தில் மொத்தம், 143 பேரில் 143 பேர் தேர்வு எழுதினர். பிரெஞ்சு பாடத்தில் மொத்தம், 404 பேரில், 402 பேர் தேர்வு எழுதினர். ஒருவர் விலக்கு பெற்றுள்ளார். ஒருவர் வருகை புரியவில்லை. ஹிந்தி பாடத்தில் மொத்தம், 58 பேரில் 58 பேர் தேர்வு எழுதினர்.

தனித் தேர்வர்களில் தமிழ் தேர்வில் மொத்தம் 65 பேரில், 56 பேர் தேர்வு எழுதினர். 9 பேர் வருகை புரியவில்லை. மலையாளப் பாடத்தில் மொத்தம் ஒருவரில் ஒருவர் தேர்வு எழுதினர். பிரெஞ்சு பாடத்தில் மொத்தம் ஒருவரில் ஒருவர் தேர்வு எழுதினர். ஹிந்தி பாடத்தில் மொத்தம் ஒருவரில் ஒருவர் வருகை புரியவில்லை.

34 பேர் ஆப்சென்ட்

மேலும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சலுகை பெற்றோர் மொத்தம், 90 மாணவர்கள், அரசு தேர்வு துறையால் வழங்கப்படும் கூடுதலான ஒரு மணி நேரம் சொல்வதை எழுதுபவர், மொழிப்பாட விலக்கு போன்ற சலுகைகளை பெற்று தேர்வு எழுதியுள்ளனர்.
மாவட்டத்தில் மொத்தம், 42 தேர்வு மையங்களில் 12 ம் வகுப்பு தேர்வு எழுத தகுதி உடைய பள்ளி மாணவ, மாணவியரில், 6,333 பேரில் 6,283 தேர் தேர்வு எழுதி உள்ளார்கள். 16 பேர் விலக்கு பெற்றுள்ளனர். 34 பேர் வருகை புரியவில்லை.

இந்நிலையில், ஊட்டி பிரீக்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தை, கலெக்டர் லட்சுமி பவ்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருநாவுக்கரசு உடனிருந்தார்.






      Dinamalar
      Follow us