sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

'கொடை' அருவியில் விழுந்த பொள்ளாச்சி மாணவர் மாயம்

/

'கொடை' அருவியில் விழுந்த பொள்ளாச்சி மாணவர் மாயம்

'கொடை' அருவியில் விழுந்த பொள்ளாச்சி மாணவர் மாயம்

'கொடை' அருவியில் விழுந்த பொள்ளாச்சி மாணவர் மாயம்


UPDATED : அக் 21, 2025 09:44 AM

ADDED : அக் 21, 2025 09:45 AM

Google News

UPDATED : அக் 21, 2025 09:44 AM ADDED : அக் 21, 2025 09:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல்:
கொடைக்கானல் அஞ்சுவீடு அருவியில் தவறி விழுந்த பொள்ளாச்சி மருத்துவ மாணவர் மாயமானார்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு, கோவையை சேர்ந்த மருத்துவ கல்லுாரி மாணவர்கள், 11 பேர் நேற்று முன்தினம் மாலை சுற்றுலா வந்தனர். இவர்கள் பேத்துப்பாறை அருகே உள்ள அஞ்சு வீடு அருவியை பார்க்க சென்ற நிலையில், சிலர் ஆற்றில் குளித்துள்ளனர். இதில், பொள்ளாச்சியை சேர்ந்த மாணவர் நந்தகுமார் 21, ஆற்றுப்படுகை பகுதியில் தவறி விழுந்தார்.

தீயணைப்பு துறையினர் தேடிய நிலையில், 2வது நாளாக நேற்று மாலை வரை அவர் கிடைக்கவில்லை. தொடர்ந்து, கொடைக்கானல் பகுதியில் கனமழை பெய்ததால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மாலையில் தேடும் பணி நிறுத்தப்பட்டது. அபாயகரமான இந்த அருவிக்கு செல்வதை தவிர்க்க போலீசார் மற்றும் உள்ளூர்வாசிகள் அறிவுறுத்திய போதும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us