அஞ்சல் துறையின் வினாடி-வினா போட்டி கல்வி ஊக்கத்தொகை பெற யோசனை
அஞ்சல் துறையின் வினாடி-வினா போட்டி கல்வி ஊக்கத்தொகை பெற யோசனை
UPDATED : ஆக 10, 2024 12:00 AM
ADDED : ஆக 10, 2024 09:21 AM
ஈரோடு:
அஞ்சல் துறையின் கல்வி ஊக்கத்தொகை பெற, வினாடி-வினா போட்டியில் பங்கேற்க, 6 முதல், 9ம் வகுப்பு மாணவ, மாணவிய-ருக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
ஈரோடு முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கோபாலன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
அஞ்சல் துறை, தபால் தலை சேக-ரிக்கும் வழக்கத்தை ஊக்குவிக்க, 6 முதல், 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, தீன தயாள் ஸ்பார்ஷ் திட்டம் செயல்படுகிறது. மாணவ, மாணவியர் பள்ளி தேர்வில், 60 சதிவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு, 5 சதவீத தளர்ச்சி உண்டு. மாணவ, மாணவியர் தங்கள் பெயரில் அஞ்சல் தலை சேமிப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும். அல்லது பள்ளியில் இயங்கும் தபால் தலை சேகரிப்பு மன்ற உறுப்பினராக இருக்க வேண்டும். முதற்-கட்டமாக தபால் தலை சேகரிப்பு பற்றி, எழுத்துப்பூர்வ வினாடி--வினா தேர்வு வரும் செப்., 28 ல் நடக்க உள்ளது.
இரண்டாம் கட்டமாக தபால் தலை சேகரிப்பு பற்றி திட்ட அறிக்கை தயார் செய்தல் தேர்வும் நடக்க உள்ளது.முதற்கட்ட தேர்வுக்கு நடப்பு நிகழ்ச்சிகள், வரலாறு, அறிவியல், விளையாட்டு, கலாசாரம், புவியியல், ஆளுமைகள், அஞ்சல் தலை சேகரிப்பு (உள்ளூர் மற்றும் தேசியம்) தொடர்பான, 50 கேள்விகளுக்கு பதில் தர வேண்டும். இரண்டாம் கட்டமாக திட்ட அறிக்கை, 4 முதல், 5 பக்கங்களில் தயாரிக்க வேண்டும்.
அதில், 16 அஞ்சல் தலை மற்றும் 500 வார்த்தைகளுக்கு மிகாமல் அமைக்க வேண்டும். இரு தேர்விலும் தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகையாக, 6,000 ரூபாய் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், ஈரோடு கோட்டம், ஈரோடு-638 001 என்ற முகவரிக்கு வரும் செப்., 3க்குள் அனுப்ப வேண்டும். அஞ்சல் தலை சேகரிப்பு கணக்குகளை, தலைமை அஞ்சல் நிலையத்தில் துவங்கலாம். அனைத்து அஞ்சலகத்திலும் விண்ணப்பங்கள் கிடைக்கும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.