sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 12, 2025 ,ஆவணி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தமிழகத்தில் துணைவேந்தர்களுக்கு அழுத்தம்: கவர்னர் குற்றச்சாட்டு

/

தமிழகத்தில் துணைவேந்தர்களுக்கு அழுத்தம்: கவர்னர் குற்றச்சாட்டு

தமிழகத்தில் துணைவேந்தர்களுக்கு அழுத்தம்: கவர்னர் குற்றச்சாட்டு

தமிழகத்தில் துணைவேந்தர்களுக்கு அழுத்தம்: கவர்னர் குற்றச்சாட்டு


UPDATED : பிப் 18, 2025 12:00 AM

ADDED : பிப் 18, 2025 04:53 PM

Google News

UPDATED : பிப் 18, 2025 12:00 AM ADDED : பிப் 18, 2025 04:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
தமிழகத்தில் கவர்னர்கள் செயல்பட முடியாத அளவுக்கு மிகப்பெரிய அழுத்தம் உள்ளது என கவர்னர் ரவி கூறியுள்ளார்.

சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கவர்னர் ரவி பேசியதாவது:


கவர்னர் மாளிகையில் பல சிலைகள் இருந்தாலும், அதில் பாரதியார் சிலை இல்லாமல் இருந்தது. பாரதிய வித்யா பவன் உதவியால் தான் சிலை நிறுவப்பட்டது. பாரதியார் பெயரில் பல்கலை இருந்தாலும், அவருக்கு என பல்கலைகளில் இருக்கை ஏதும் இல்லை.

60 ஆண்டுகளாக தமிழ், தமிழ் என்று பேச மட்டுமே அரசியல் செய்கின்றனர். தமிழர்களுக்கு தமிழ் இலக்கியத்திற்கும் எந்த சேவையும் செய்யப்படவில்லை. தமிழகத்தில் துணைவேந்தர்கள் செயல்பட முடியாமல் மிகப்பெரிய அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்நிலை விரைவில் மாறும்.

இவ்வாறு கவர்னர் ரவி பேசினார்.






      Dinamalar
      Follow us