sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தனியார் பல்கலை சட்டம் காங்கிரஸ் - கம்யூ., மோதல்

/

தனியார் பல்கலை சட்டம் காங்கிரஸ் - கம்யூ., மோதல்

தனியார் பல்கலை சட்டம் காங்கிரஸ் - கம்யூ., மோதல்

தனியார் பல்கலை சட்டம் காங்கிரஸ் - கம்யூ., மோதல்


UPDATED : அக் 18, 2025 10:30 AM

ADDED : அக் 18, 2025 10:30 AM

Google News

UPDATED : அக் 18, 2025 10:30 AM ADDED : அக் 18, 2025 10:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
''தனியார் பல்கலை சட்ட திருத்த மசோதாவை எதிர்ப்பவர்கள் பிற்போக்கு சிந்தனை கொண்டவர்கள்,'' எனக்கூறிய காங்கிரஸ் எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகைக்கு, கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ., நாகை மாலி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

மாநகராட்சி பகுதிகளில், 25 ஏக்கர்; நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில், 30 ஏக்கர்; மற்ற பகுதிகளில், 50 ஏக்கர் நிலம் இருந்தால், தனியார் பல்கலை அமைக்க வகை செய்யும் சட்ட மசோதா நேற்று, சட்டசபையில் நிறைவேறியது.

அப்போது நடந்த விவாதத்தில் பேசிய காங்கிரஸ் செல்வப்பெருந்தகை, ''முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள், இந்த மசோதாவை ஆதரிப்பர். பிற்போக்கு சிந்தனை கொண்டவர்கள் எதிர்ப்பர்,'' என்றார்.

அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மார்க்சிஸ்ட் - நாகை மாலி, ''இந்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் பிற்போக்காளர்கள் என்று, செல்வப்பெருந்தகை கூறியது தவறான கருத்து.

இதை ஏற்க முடியாது. இந்த சட்டத்தால், உயர் கல்வியில் இதுவரை தமிழகம் பின்பற்றி வந்த நல்ல அம்சங்கள் நீர்த்துப் போகும், ஏழைகளின் உயர் கல்வி, இடஒதுக்கீடு பாதிக்கப்படும். உயர் கல்வியில் தனியார் ஆதிக்கத்திற்கு வழிவகுக்கும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us