sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தோட்டக்கலை கல்லுாரி மாணவியருக்கு போட்டி தேர்வுக்கான புத்தகங்கள் வழங்கல்

/

தோட்டக்கலை கல்லுாரி மாணவியருக்கு போட்டி தேர்வுக்கான புத்தகங்கள் வழங்கல்

தோட்டக்கலை கல்லுாரி மாணவியருக்கு போட்டி தேர்வுக்கான புத்தகங்கள் வழங்கல்

தோட்டக்கலை கல்லுாரி மாணவியருக்கு போட்டி தேர்வுக்கான புத்தகங்கள் வழங்கல்


UPDATED : டிச 12, 2025 07:56 AM

ADDED : டிச 12, 2025 07:57 AM

Google News

UPDATED : டிச 12, 2025 07:56 AM ADDED : டிச 12, 2025 07:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவல-கத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில், பையூர் அரசு தோட்டக்கலை கல்லுாரி மற்றும் தளி டிப்ளமோ தோட்டக்கலை கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்களை கலெக்டர் தினேஷ்குமார் வழங்கினார்.

அவர் பேசியதாவது:

பையூர் அரசு தோட்டக்கலை கல்லுாரியில், 360 மாணவ, மாணவியரும், தளி டிப்ளமோ தோட்டக்கலை கல்லுாரியில், 73 மாணவ, மாணவியரும் பயின்று வருகின்றனர். இம்மாணவ, மாணவியர்கள் பாடதிட்டம் மட்டுமல்லாமல், கல்லுாரி பயிலும் காலங்களிலேயே யு.பி.எஸ்.சி., மற்றும் டி.என்.பி.எஸ்.சி., உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு, தயார்படுத்திக்கொள்ளும் வகையில், 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. இப்புத்தகங்கள் மாணவியர்கள் படிக்கும் வகையில் கல்லுாரி நூலகங்களில் வைக்கப்பட உள்ளன. மேலும் யு.பி.எஸ்.சி மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்-படும் தேர்வுகளுக்கு தயாராகி வரும் தேர்வர்கள் தன்னம்பிக்கையுடன் பயின்று தேர்வினை எதிர்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

டி.ஆர்.ஓ., சாதனைகுறள், பையூர் அரசு தோட்டக்கலை கல்லுாரி முதல்வர் அனிசாராணி மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us