sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மக்கள் தொடர்பியல் துறை வேலைவாய்ப்பு களப்பயணத்தில் அறிந்த பள்ளி மாணவர்கள்

/

மக்கள் தொடர்பியல் துறை வேலைவாய்ப்பு களப்பயணத்தில் அறிந்த பள்ளி மாணவர்கள்

மக்கள் தொடர்பியல் துறை வேலைவாய்ப்பு களப்பயணத்தில் அறிந்த பள்ளி மாணவர்கள்

மக்கள் தொடர்பியல் துறை வேலைவாய்ப்பு களப்பயணத்தில் அறிந்த பள்ளி மாணவர்கள்


UPDATED : செப் 03, 2024 12:00 AM

ADDED : செப் 03, 2024 09:53 AM

Google News

UPDATED : செப் 03, 2024 12:00 AM ADDED : செப் 03, 2024 09:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்:
சேலம், கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மாதிரிப்பள்ளி மாணவர்கள், 100க்கும் மேற்பட்டோர், களப்பயணமாக பெரியார் பல்கலைக்கு வந்து இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையின் செயல்பாடு, அதன் வேலைவாய்ப்பு குறித்து அறிந்து கொண்டனர்.

அரசு பள்ளி மாணவர்களின் வாழ்க்கை உயர்வுக்கு வழிகாட்டும்படி, வேலைவாய்ப்பு குறித்து அறிய, துறைசார் களப்பயணங்களை அரசு ஊக்குவிக்கிறது. அதன்படி சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த அரசு மாதிரி பள்ளி மாணவர்கள், 100க்கும் மேற்பட்டோர், சேலம் பெரியார் பல்கலைக்கு வந்தனர்.

அங்கு இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையின் ஊடகம் சார்ந்த செயல்பாடுகளை பார்வையிட்டனர். அப்போது துறைசார் வேலைவாய்ப்பு குறித்து, துறைத்தலைவர் நந்தகுமார், டிவி நிகழ்ச்சி ஒளிபரப்பு குறித்து இணை பேராசிரியர் சுப்பிரமணி விளக்கம் அளித்தனர். டிவி, ஒலிப்பதிவு, தொகுப்பு பணிகள் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. துறை மாணவர்கள் சார்பில் வெளியாகும், கண்ணாடி இதழ் உருவாக்கம் குறித்து விளக்கப்பட்டது. பள்ளி மாணவர்களுடன், இத்துறையின் முன்னாள் மாணவர்களும் கலந்துரையாடினர்.இந்த களப்பயண நிகழ்வை, இதழியல் துறை சார்பில் முனைவர் தமிழ்ப்பரிதி, சேலம், கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மாதிரிப்பள்ளிகள் சார்பில் ஆசிரியர்கள் தமிழ்செல்வன், முருகேசன், பாபு ஒருங்கிணைத்தனர்.






      Dinamalar
      Follow us