sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

சபாநாயகர் அப்பாவு பேச்சுக்கு சமஸ்கிருத பேராசிரியர்கள் பதில்

/

சபாநாயகர் அப்பாவு பேச்சுக்கு சமஸ்கிருத பேராசிரியர்கள் பதில்

சபாநாயகர் அப்பாவு பேச்சுக்கு சமஸ்கிருத பேராசிரியர்கள் பதில்

சபாநாயகர் அப்பாவு பேச்சுக்கு சமஸ்கிருத பேராசிரியர்கள் பதில்


UPDATED : ஆக 31, 2024 12:00 AM

ADDED : ஆக 31, 2024 03:33 PM

Google News

UPDATED : ஆக 31, 2024 12:00 AM ADDED : ஆக 31, 2024 03:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
நாடு முழுவதும் ஐந்து கோடி மாணவர்கள், பள்ளி பருவத்திலேயே சமஸ்கிருதம் படிக்கின்றனர் என்று சமஸ்கிருத பேராசிரியர்கள் கூறியுள்ளனர்.

சமஸ்கிருத பேராசிரியர்கள் கூறியதாவது:

நாட்டில் 15 சமஸ்கிருத பல்கலைகள் உள்ளன. இவற்றின் கீழ், 1,000க்கும் மேற்பட்ட சமஸ்கிருத கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றில் 10 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர்.

கேரளாவில் 14,000 பள்ளிகளில், சமஸ்கிருதம் ஒரு மொழியாக கற்பிக்கப்படுகிறது. நாடு முழுதும், ஐந்து கோடி மாணவர்கள், பள்ளி பருவத்திலேயே சமஸ்கிருதம் படிக்கின்றனர். எட்டு மாநிலங்களில், பள்ளிகளில் இரண்டாம் நிலைப் பாடமாக சமஸ்கிருதம் உள்ளது.

இது தவிர, நாட்டில் 5,000க்கும் மேற்பட்ட சமஸ்கிருத பாடசாலைகள், பத்துக்கும் மேற்பட்ட சமஸ்கிருத அகாடமிகள், 16 ஆய்வு நிறுவனங்கள் செயல்படுகின்றன.

சமஸ்கிருத பாரதி அமைப்பு உட்பட பல்வேறு அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், அனைவரும் எளிதாக சமஸ்கிருதம் பேச, இலவசமாக பயிற்சி அளிக்கின்றன. இவற்றின் வழியாக லட்சக்கணக்கானோர் பயன் அடைந்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us