UPDATED : டிச 26, 2024 12:00 AM
ADDED : டிச 26, 2024 08:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்:
தமிழக அரசு சார்பில் 2024-25ம் ஆண்டிற்கான தமிழ்மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வு நடந்தது. அரசு உதவிபெறும் பள்ளி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளி பிளஸ் 1 மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.
ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஸ்ரீஹரி, முகில் குமரன், பிரேம் ஆனந்த், முகமது நதீம், விஷாலினி, பேட்ரிக் ஜெய்டன், ராம்பிரியா மாதந்தோறும் ரூ.1500 பெறத் தகுதி பெற்றனர்.
சாதித்த மாணவர்கள், பயிற்றுவித்த ஆசிரியர்களை பள்ளித்தாளாளர் பாபு அப்துல்லா மற்றும் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் பாராட்டினர்.