மாவட்டத்தில் 2 இடங்களில் சிறப்பு பயிற்சி நுழைவுத்தேர்வு
மாவட்டத்தில் 2 இடங்களில் சிறப்பு பயிற்சி நுழைவுத்தேர்வு
UPDATED : ஜூலை 06, 2024 12:00 AM
ADDED : ஜூலை 06, 2024 09:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:
தமிழக அரசு சார்பில், நான் முதல்வன் திட்டத்தில் போட்டி தேர்வுகளில் பங்கேற்போரில், தகுதியானவர்கள் தேர்வு செய்து, தங்கும் விடுதியுடன் கூடிய சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதில் விண்ணப்பித்தவர்களுக்கு வரும், ௧௪ம் தேதி நுழைவுத்தேர்வு நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் நான் முதல்வன் ரயில்வே பணி சிறப்பு பயிற்சிக்கான நுழைவுத்தேர்வு, ஈரோடு செங்குந்தர் பள்ளி; வங்கி பணி சிறப்பு பயிற்சிக்கான நுழைவுத்தேர்வு கலைமகள் பள்ளி என இரு மையங்களில் நடக்கிறது.
மாவட்டத்தை சேர்ந்த, 680 பேர் எழுதவுள்ளனர். ஓ.எம்.ஆர்., வினாத்தாள் முறையில் காலை, 10:00 மணிக்கு துவங்கி, ௧1:00 மணிக்கு நிறைவடையும்.