மாநில, தேசிய சிலம்பம் போட்டி: மாணவர்களுக்கு கலெக்டர் வாழ்த்து
மாநில, தேசிய சிலம்பம் போட்டி: மாணவர்களுக்கு கலெக்டர் வாழ்த்து
UPDATED : பிப் 11, 2026 02:17 PM
ADDED : பிப் 11, 2026 02:18 PM

விழுப்புரம்:
விழுப்புரத்தில் மாநில, தேசிய அளவில் நடந்த சிலம்பம் போட்டியில் வென்ற டி.என்.ஆர்.எஸ்., அன்பு சிலம்பம் மற்றும் கராத்தே அறக்கட்டளை மாணவர்கள், கலெக்டரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
நாகையில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி கடந்த டிசம்பர் 27, 28, 29 தேதிகளில் நடந்தது. இதில் 38 மாவட்டங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். போட்டியில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த டி.என்.ஆர்.எஸ்., அன்பு சிலம்பம் மற்றும் கராத்தே அறக்கட்டளை மாணவர்கள் யாழினி மலர் தங்கம் வென்றார்.
மேலம், சூர்யா, ஸ்ரீனிராஜ் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர். தமிழ்ச்செல்வி தனித்திறமை போட்டியில் மூன்றாம் இடத்தை பிடித்து விழுப்புரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தனர்.
இதில், மாணவி யாழினிமலர் கடந்த 31, 1ம் தேதிகளில் நடந்த தேசிய அளிலான சிலம்பம் போட்டியில், தனித்திறமை பிரிவில் 2வது இடத்தை பிடித்து வெள்ளியையும், தொடுமுறை போட்டியில் 3வது இடத்தை பிடித்து வெண்கல பதக்கத்தையும் வென்றார்.
மாநிலம், தேசிய சிலம்பம் போட்டிகளில் வென்று பதக்கங்கள் பெற்ற, வீரர், வீராங்கனைகள் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மானை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மாவட்ட சிலம்பாட்ட கழக செயலாளர் அன்பரசி, இணை செயலாளர் சதீஷ்குமார் உடனிருந்தனர்.

