UPDATED : மார் 13, 2025 12:00 AM
ADDED : மார் 13, 2025 09:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்:
மதுரை சவுராஷ்டிரா கல்லுாரி வளாகத்தில் சி.எஸ்.ராமச்சாரியின் வெண்கலச் சிலை திறப்பு நடந்தது.
விழாவில் தலைமை வகித்த செயலாளர் குமரேஷ் திறந்து வைத்தார். பொருளாளர் பாஸ்கர், நிர்வாக குழு உறுப்பினர்கள் பன்சிதர், ராமசுப்பிரமணியன், வெங்கடேஸ்வரன், முரளிதாஸ் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் ஸ்ரீனிவாசன் வரவேற்றார்.
முன்னாள் எம்.எல்.ஏ., எஸ்.எஸ். சரவணன், பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் மகாலட்சுமி பேசினர். முன்னாள் கல்லுாரி முதல்வர் ரவீந்திரன், மகளிர் கல்லுாரி முதல்வர் பொன்னி, சவுராஷ்டிரா சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் தினேஷ், கே.எல்.என். கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் பாலகிருஷ்ணன் பங்கேற்றனர்.