UPDATED : டிச 18, 2024 12:00 AM
ADDED : டிச 18, 2024 06:19 PM

ஆராய்ச்சி உள்கட்டமைப்பை வலுப்படுத்த நான்கு தேசிய அளவிலான மேம்பட்ட பகுப்பாய்வு (சத்தி) மற்றும் தொழில்நுட்ப உதவி நிறுவன மையங்களையும், 15 மண்டல மேம்பட்ட பகுப்பாய்வு உபகரண வசதி (சய்ப்) மையங்களையும் இந்தியா அரசு நிறுவியுள்ளது.
முக்கிய பகுப்பாய்வுக் உபகரணங்களை கொண்ட இந்த மையங்கள், அறிவியல் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதில் முக்கியமானவை. சத்தி மையங்கள் ஐ.ஐ.டி.,-டெல்லி, ஐ.ஐ.டி.,-காரக்பூர், பி.எச்.யு.,-வாரணாசி மற்றும் ஐ.ஐ.டி.,-ஹைதராபாத் ஆகியவற்றில் நடத்தப்படுகின்றன, அதே நேரத்தில் சய்ப் மையங்கள் பல்வேறு மாநிலங்களில் பரவியுள்ளன.
இத்தகைய மையங்களில் ஒட்டுமொத்தமாக, ஆண்டுதோறும் சுமார் 1,00,000 மாதிரிகளை ஆய்வு செய்து, 32,000 பயனர்களுக்கு சேவை வழங்கப்படுவதோடு, ஒவ்வொரு ஆண்டும் 2,200 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிடப்படுகின்றன.